பெங்களூரு ஆர்.சி.பி பேரணியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும். வெற்றிப் பேரணியின் போது இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய கர்நாடக அரசு பிரார்த்தனை செய்கிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.