கடும் சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (08.12.2025 - திங்கட்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 171 புள்ளிகள் சரிந்த நிப்டி 26 ஆயிரத்து 14 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 480 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 292 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
144 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 736 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 451 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 253 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
225 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 772 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 486 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 535 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.