ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update:2025-06-25 20:33 IST

மும்பை.

இஸ்ரேல் , ஈரான் போர், சர்வதேச வர்த்தக நிலையற்ற தன்மை உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 200 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 244 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 159 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 621 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

99 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 849 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 700 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 755 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

73 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 221 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 67 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 698 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்