ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (27.01.2026 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 126 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 175 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 732 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 205 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 236 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 58 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 319 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 857 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
71 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 137 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 840 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 704 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.