தனியார் நிறுவன ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-06-06 17:36 GMT

புதுச்சேரி

வில்லியனூரை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது35). தனியார் நிறுவன ஊழியர். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வைத்திலிங்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட வைத்திலிங்கத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் பாலமுருகன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்