திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது

திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் கைது செய்து 3 வாகனங்களை பறிதுதல் செய்தனர்.

Update: 2022-11-24 15:57 GMT

வில்லியனூர்

வில்லியனூர் கண்ணகி நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 23). புதுவையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது, யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வில்லியனூர் போலீசில் சரண்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்தநிலையில் ரோந்து வந்த போலீசார் வில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து விசாரித்தனர். அப்போது அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர், விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரை சேர்ந்த அப்பு என்ற வெங்கடேசன் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்