கல்வி கட்டணம் நிர்ணயிப்பது குறித்த கூட்டம் தள்ளிவைப்பு

புதுச்சோியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது குறித்த கூட்டம் செப்டம்பர் 1-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2022-08-12 18:23 GMT

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்விகட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக கட்டணக்குழு கூட்டம் லாஸ்பேட்டை உயர்கல்வித்துறை வளாகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கட்டணக்குழு தலைவர் சுதந்திரம் தலைமை தாங்கினார். இதில் புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பு செயலாளர் புனிதமேரி, பட்டய கணக்காளர் செல்வம் மற்றும் தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது கல்விகட்டண நிர்ணயம் தொடர்பாக தேசிய மருத்துவ கவுன்சிலின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாகவும், அதன் முடிவு வரும்வரை கூட்டத்தை தள்ளிவைக்கவேண்டும் என்றும் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கூட்டம் செப்டம்பர் 1-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்