குடிபோதையில் தவறி விழுந்த முதியவர் பலி

கோட்டுச்சேரி அருகே குடிபோதையில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

Update: 2023-09-02 16:11 GMT

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரிமேடு சுனாமி நகரை சேர்ந்தவர் இடும்பன் (வயது 70). அவரது மனைவி சுந்தராம்பாள் (65). சம்பவத்தன்று இடும்பன் மதுபோதையில் வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது அங்குள்ள பாலத்தில் நடந்து வந்தபோது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்