தூக்குப்போட்டு கார் டிரைவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-23 16:42 GMT

புதுச்சேரி

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செங்கோல் ராயர் (வயது 45). கார் டிரைவர். இவரது மனைவி வனிதாமேரி (39). இவர் களுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று ஏற்பட்ட தகராறில் வனிதா கோபித்து கொண்டு காப்பகத்திற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்து போன செங்கோல் ராயர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்