அரசு தொழில்நுட்ப பள்ளி மாணவர்கள் போராட்டம்

லாஸ்பேட்டையில் அரசு தொழில் நுட்ப பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-23 16:54 GMT

புதுச்சேரி

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனை மூட அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தொழில்நுட்ப பள்ளியை மூடும் முடிவை அரசு கைவிட வலியுறுத்தி அந்த பள்ளி மாணவர்கள் இன்று திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் கூட்டமைப்பு துணை தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஆபேத் முன்னிலை வகித்தார்.

மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் சாமிநாதன் கலந்துகொண்டு பேசினார். இந்த போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்