கழிப்பறையில் தவறி விழுந்த மூதாட்டி பலி

கழிப்பறைக்கு சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.

Update: 2022-11-25 16:28 GMT

மூலக்குளம்

ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் பிரமிளா. இவரது பராமரிப்பில் பெரியம்மா சாரா ஜோஸ்பின் (வயது 82) இருந்து வந்தார். இந்தநிலையில் சாரா ஜோஸ்பினுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று  இவர் கழிப்பறைக்கு சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை பிரமிளா மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்