தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சேலம் தெற்கு காவல் துணை ஆணையராக இருந்த மதிவாணன், வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
- கரூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
- திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன், கோவை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
- நெல்லை கிழக்கு காவல் துணை ஆணையராக இருந்த ஆதர்ஷ் பச்சேரா, பெரம்பலூர் எஸ்.பி.யாக நியமனம்
- சேலம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த அருண் கபிலன், நாகை எஸ்.பி.யாக நியமனம்
- விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பெரோஸ் கான், கரூர் எஸ்.பி.யாக நியமனம்
- திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
- திருவல்லிக்கேனி துணை ஆணையராக செல்வ நாகரத்தினம் நியமனம்
- நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நிஷா நியமனம்
- திருப்பத்தூர் எஸ்.பியாக ஸ்ரேயா குப்தா நியமனம்
- சேலம் எஸ்.பியாக கவுதம் கோயல் நியமனம்
- விருதுநகர் எஸ்.பி.யாக கண்ணன் நியமனம்
- மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்டாலின் நியமனம்
- தருமபுரி எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமனம்
- சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக இருந்த ஶ்ரீனிவாசன் தென்காசி எஸ்.பி.யாக நியமனம்
மேலும் அதன் விவரம் வருமாறு:-