15 வயது சிறுமியை கடத்தி திருமணம்: நேபாள வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாலிபர் கடத்தி சென்றார்.;

Update:2025-04-03 07:46 IST

ஈரோடு,

ஈரோட்டில் உள்ள நூற்பாலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி வேலை செய்து வருகின்றனர். இதே நூற்பாலையில் நேபாளம் நாட்டை சேர்ந்த பிலால் என்பவருடைய மகன் உபேந்தர் (வயது 22) வேலை செய்து வந்தார். இதற்கிடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் 15 வயது மகள் அவ்வப்போது நூற்பாலைக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது உபேந்தருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் உபேந்தர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் சிறுமியை இமாச்சல பிரதேசத்துக்கு உபேந்தர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இமாச்சல பிரதேசத்துக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும் உபேந்தரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உபேந்தரை கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்