பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து

எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சாலக்குடியில் நிறுத்தப்படும்;

Update:2025-05-22 10:38 IST

சென்னை,

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

*மே 24ம் தேதி, எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சாலக்குடியில் நிறுத்தப்படும்

*மேற்கு வங்கம் - ஹவுரா, ஜூன் 9-ம் தேதி மாலை 4 மணிக்கு, குமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்வள்ளியூரில் நிறுத்தப்படும்.

*தாம்பரம் - நாகர்கோவில் ஜூன் 10, இரவு 10.40 மணி, அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையில் நிறுத்தப்படும்

&திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல், ஜூன் 11, காலை 7.20 மணி , எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் நிறுத்தப்படும். என தெரிவிக்கப்ட்டுள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்