சாக்கடை கால்வாயில் மூதாட்டியின் சடலம் மீட்பு - தூத்துக்குடியில் பரபரப்பு

சாக்கடை கால்வாய்க்குள் மூதாட்டி தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-09-04 15:58 IST

தூத்துக்குடி மாவட்டம் பண்டுகரை சாலை அருகே பக்கிள் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் சாக்கடை நீர் கலந்து ஓடும் நிலையில், அது சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது. இந்த கால்வாயில் இன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடை கால்வாய்க்குள் மூதாட்டி தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்