சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-06-04 18:23 IST

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் 06.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ரெட்ஹில்ஸ்:

சோத்துப்பெரும்பேடு பகுதி, கரனோடை பகுதி, சோழவரம், ஒரக்காடுசாலை, கோட்டைமேடு, பெரியகாலனி, செம்புலிவரம்.

முகப்பேர்:

பாடி டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் நகர், டிவிஎஸ் அவென்யூ, ரேடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், சிவன் கோயில், படவட்டம்மன் கோயில் தெரு, வள்ளலார் தெரு. என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்