சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னையில் 29.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருமுடிவாக்கம்: எருமையூர், கரஷேர் ஏரியா,கிஸ்கிந்த பிரதான சாலை , ராஜீவ் நகர், இந்திரா நகர், குரு நகர்,விவேகானந்தா நகர், பலந்தண்டலம் , நாகன் தெரு.