22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நெல்லை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருவாரூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.