இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.;
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர். திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் , தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி , ராமநாதபுரம் , சிவகங்கை, சென்னை , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.