இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .;
சென்னை,
தமிழ்நாட்டில் மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .
இந்த நிலையில், இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தேனி ,திண்டுக்கல் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .