அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-09-18 16:51 IST

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 32  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை புதுக்கோட்டை , தஞ்சாவூர் , ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, வேலூர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை   ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்