இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.;
சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், நாகை, குமரி மாவட்ட மலை பகுதிகள், கோவை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.