நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது;
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராணிபேட்டை, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, கோவை, திருப்பூர் ஆகிய 23 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.