காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.;
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அதேபோல், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.