இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் வடக்கு திசையில் நகர்ந்துள்ளது. புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளில், கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்கால் கிழக்கு - வடகிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதாரண்யத்திற்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இந்நிலையில், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தேனி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com