ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம்
காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு ஸ்காட்லாந்தின் ஆர்டெசியர் நகரம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.;
எடின்பர்க்,
சீன எரிசக்தி நிறுவனமானது ஸ்காட்லாந்தில் மிகப்பெரிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது.
இதன்படி ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஸ்காட்லாந்தில் காற்றாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஸ்காட்லாந்தின் ஆர்டெசியர் நகரம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அந்த பகுதியைச் சேர்ந்த 1,500 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என ஸ்காட்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.