அமீரக அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்ற அனில்குமார் பொல்லாவுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.;
அபுதாபி,
அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந் தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார். இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அமீரகத்தில் இதுவரை இத்தனை பெரிய தொகை யாரும் லாட்டரியில் பரிசாக வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அனில்குமார் பொல்லாவின் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தான் முதலில் சொகுசு சூப்பர் கார் ஒன்றை வாங்கி பிறகு எழு நட்சத்திர ஓட்டலில் ஒரு மாதம் தங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த பணத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பதை கவனமாக திட்டமிட நான் நேரம் எடுத்துக்கொள்வேன் என கூறியுள்ளார். அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்ற அனில்குமார் பொல்லாவுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.