40 தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது - அன்பில் மகேஷ்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கின்ற இடமெல்லாம் மக்களிடம் பேராதரவு இருக்கிறது என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Update: 2024-03-29 10:10 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்ளை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது ,

தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செல்கின்ற இடமெல்லாம் மக்களிடம் பேராதரவு இருக்கிறது.

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கூட்டணி கட்சிகள் சின்னங்களை கோரி விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். நிச்சயமாக எந்த சின்னம் வழங்கினாலும் நாங்கள் வெற்றி பெற பாடுபடுவோம். அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல குளறுபடிகள் இருக்கிறது. அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தாமல் எங்களுடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான வேலைகளை செய்யும் பணியில் கண்ணும் கருத்துமாக உள்ளோம்.என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்