வங்காளதேச அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சறுத்தல் ? ஐசிசி மறுப்பு

வங்காளதேச அரசு, அந்த நாட்டு அணி இந்தியாவுக்கு சென்று விளையாடக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.;

Update:2026-01-13 16:12 IST

கொல்கத்தா,

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இதையடுத்து, வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.

எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியது. அத்துடன் தங்கள் நாட்டில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. மேலும், தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது.

இதற்கிடையே , வீடியோ கான்பரன்ஸ் மூலம் வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஐ.சி.சி. போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. ஆனால் வங்காளதேச அரசு அந்த நாட்டு அணி இந்தியாவுக்கு சென்று விளையாடக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில், வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தங்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளதாக வங்காளதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ‘பாதுகாப்பு விவகாரத்தில் நஸ்ருல் கூறுவது முற்றிலும் பொய். முஸ்தாபிசுர் ரகுமானை அணியில் சேர்த்தால் பிரச்சினை ஏற்படும் என்பது பற்றி எதுவும் பேசவில்லை’ என ஐ.சி.சி. திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்