திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி: ஜி.எஸ்.டி. அணி வெற்றி
3-வது திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
3-வது திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.
இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணி 4-1 என்ற கோல் கணக்கில் தயாந்த் வீரன்சை தோற்கடித்தது. ஜி.எஸ்.டி. அணியில் செந்தில் குமார், ரஞ்சித், துஷால், செல்வகுமார் தலா ஒரு கோலடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் எஸ்.எம்.நகரை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் வருமான வரி-ஐ.ஓ.பி. (பிற்பகல் 2.30 மணி), இந்தியன் வங்கி-தெற்கு ரெயில்வே (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.