செங்டு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அலெஜான்ட்ரோ டாபிலோ
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
பீஜிங்,
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பிராண்டன் நகஷிமா (அமெரிக்கா) - அலெஜான்ட்ரோ டாபிலோ (சிலி) ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய அலெஜான்ட்ரோ டாபிலோ 6-4, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் பிராண்டன் நகஷிமாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.