செங்டு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
பீஜிங்,
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜப்பானின் டாரோ டேனியல் - கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ 7-6 (7-2), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் டாரோ டேனியலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.