நான் ஜோதிடர் அல்ல - நிருபர்கள் கேள்விக்கு பிரியங்கா காந்தி பதிலடி


நான் ஜோதிடர் அல்ல - நிருபர்கள் கேள்விக்கு பிரியங்கா காந்தி பதிலடி
x

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 180க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்காகாந்தி பேசியதாவது:

அட்டூழியங்களுக்கும் அநீதிக்கும் எதிராக மக்கள் நிற்கிறார்கள். இதற்கு இந்த மாபெரும் கூட்டமே சான்று. இன்று ராம நவமி. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேர்தல் பத்திரம் ஒரு வெளிப்படையான திட்டம் என பிரதமர் மோடி கூறுகிறார். பிறகு ஏன் நன்கொடையாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டது?

விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சினைகளை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. இன்று ஒரு விவசாயி 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக தற்கொலை செய்து கொள்கிறார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஊழல் செய்யாமல் தேர்தல் நடத்தினால், பா.ஜனதா 180க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைதொடர்ந்து இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரியங்காவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு,‛‛நான் ஜோதிடர் அல்ல. இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நான் ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றேன். மதவாத அரசியலால் மக்கள் சோர்ந்து போய்விட்டனர். மக்களிடம் செலவு செய்ய பணமில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என பிரியங்கா பதில் அளித்தார்.


Next Story