தனியார் வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் இன்று நடக்கிறது


தனியார் வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 6 Aug 2019 10:30 PM GMT (Updated: 6 Aug 2019 8:16 PM GMT)

பெரம்பலூரில் உள்ளமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனை நிறுவனம் பங்கு பெறும் “சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்“ நடைபெறவுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ளமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனை நிறுவனம் பங்கு பெறும் “சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்“ நடைபெறவுள்ளது. அந்த நிறுவனம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பட்டபடிப்பு, டி.பார்ம் மற்றும் பி.பார்ம் கல்வித்தகுதியுள்ள 100-க்கு மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story