தூத்துக்குடியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் 161 பேர் கைது


தூத்துக்குடியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் 161 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 6:06 AM GMT (Updated: 28 Oct 2020 6:06 AM GMT)

தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா கட்சியினர் 161 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி தலைவர்கள் ஆறுமுகம் மற்றும் முருகேசன், மகளிர் அணி தலைவிகள் தேன்மொழி மற்றும் லீலாவதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் பால்ராஜ் (தெற்கு), ராமமூர்த்தி (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்தி, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் சத்தியசீலன், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் பிரபு, மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், மான்சிங், வீரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 42 பெண்கள் உள்பட 161 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

Next Story