சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக மனுக்கள்: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
புதுடெல்லி,
அரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் தகவல்தொடர்புகள் முடக்கப்பட்டதுடன், ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகளை நீக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை நடத்த உள்ளது. இந்த மனுக்களை வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.க்கள் முகமது அக்பர் லோன், ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகமியை நேரில் ஆஜர்படுத்தக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தொடர்புடைய இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story