காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் கைது; ஒருவர் அரசு ஊழியர்...!!


காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் கைது; ஒருவர் அரசு ஊழியர்...!!
x

Image Courtesy:  ndtv

தினத்தந்தி 31 Aug 2023 9:42 PM GMT (Updated: 31 Aug 2023 9:47 PM GMT)

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 8 பயங்கரவாதிகளில் ஒருவர் அரசு பணியில் இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 30 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில், மாநில புலனாய்வு முகமை மற்றும் சி.ஐ.டி. அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.

இதில், தோடா மாவட்டத்தில் வைத்து 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, தப்பியோடிய பயங்கரவாதிகளில் சிலர் அரசு பணிகள் மற்றும் ஒப்பந்ததாரராக உள்ளனர்.

சிலர் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோர்ட்டில் கூட சிலர் பணியாற்றி வருகின்றனர் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். அவர்கள் தண்டனையில் இருந்து தப்பி, இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என போலீசார் கூறினர்.

8 பயங்கரவாதிகளும் அடில் பரூக் பரிடி, முகமது இக்பால் என்ற ஜாவித், முஜாகித் உசைன் என்ற நிசார் அகமது, தாரிக் உசைன், இஷ்தியாக் அகமது, அஜாஸ் அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இவர்களில் பரிடி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணியாற்றியவர். தோடா கோர்ட்டு வளாகத்தில் இஷ்பாக் எழுத்தராக இருந்துள்ளார். அவர்கள் அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.


Next Story