நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி


நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
x

நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. உரிமையாளரை தாக்கிவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பெலகாவி

பெலகாவி மாவட்டம் ஏ.பி.எம்.சி. போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாகுநகரில் சந்தோஷ், பிரசாந்த் ஆகிய சகோதரர்களுக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து பிரசாந்த் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது நகைகள் வாங்குவது போல் நடித்து 2 பேர் கடைக்கு வந்தனர். அவர்கள் திடீரென்று பிரசாந்திடம் துப்பாக்கி காட்டி மிரட்டி நகைகளை கொடுக்கும்படி மிரட்டல் விடுத்தார்கள். ஆனால் நகைகளை கொடுக்க மறுத்த பிரசாந்த், 2 கொள்ளையர்களையும் பிடிக்க முயன்றனர். இதனால் பிரசாந்தை தாக்கிவிட்டு 2 பேரும் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.

தகவல் அறிந்ததும் ஏ.பி.எம்.சி. போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மர்மநபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்ட மட்டும் செய்ததும், துப்பாக்கியால் சுடவில்லை என்பதும், அதே நேரத்தில் நகைக்கடையில் இருந்து எந்த தங்க நகைகளும் கொள்ளை போகவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த பிரசாந்த் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஏ.பி.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.


Next Story