டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தற்கொலை தான்; வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ அறிவிப்பு
திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தொடா்பான வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. தொிவித்துள்ளது. #DSPVishnupriya
சென்னை
கடந்த 2015ம் ஆண்டு பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இந்த வழக்கை டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா விசாரித்து வந்தாா். இந்நிலையில் விஷ்ணு பிரியா அதே ஆண்டு டி.எஸ்.பி. அலுவலகத்தில் தூக்கில் தொங்கியவாறு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதனைத் தொடா்ந்து கோகுல் ராஜ், விஷ்ணு பிரியா மரணம் தொடா்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
ஆனால் விஷ்ணு பிரியாவின் தந்தை சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோாிக்கை விடுத்தாா். அவரது கோாிக்கையை ஏற்று வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கோகுல் ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை அமைப்பின் தலைவா் யுவராஜை கைது செய்யக்கோாி விஷ்ணு பிரியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டதாகவும், அதன் விளைவாகத்தான் விஷ்ணு பிரியா மரணம் நடைபெற்றிருப்பதாகவும் தந்தை ரவி குற்றம் சாட்டினாா்.
இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாாிகள் விசாரித்து வந்தனா். இந்நிலையில் இந்த வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. அதிகாாிகள் கோவை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனா். ஏப்ரல் 16ந் தேதியுடன் வழக்கு விசாரணை முடித்து நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கு கைவிடப்பட்டது.டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தற்கொலை தான் என சிபிஐ கூறி உள்ளது இதனைத் தொடா்ந்து வழக்கு தொடா்பாக மனுதாரா் ரவி ஏதேனும் தொிவிக்க விரும்பினால் வருகிற 9ம் தேதி நேரில் ஆஜராகி தனது கருத்தை முன்வைக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story