மு.க. ஸ்டாலின் தலைவரான பின் முதன்முறையாக தி.மு.க. ஆலோசனை கூட்டம்


மு.க. ஸ்டாலின் தலைவரான பின் முதன்முறையாக தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2018 5:32 AM GMT (Updated: 8 Sep 2018 5:32 AM GMT)

தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு 7ந்தேதி மறைந்த நிலையில் கட்சிக்கான புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இதனை தொடர்ந்து முதன்மை செயலாளர் துரைமுருகன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதன்முறையாக தி.மு.க.வின் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கி உள்ளது.  இந்த கூட்டத்தில் பொது செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் 88 எம்.எல்.ஏ.க்கள், 65 மாவட்ட செயலாளர்கள், 4 எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி பணிகள், முப்பெரும் விழா, இடைத்தேர்தல், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.


Next Story