அரசு வேலைவாங்கித் தருவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ரூ.44 லட்சம் சுருட்டல்


அரசு வேலைவாங்கித் தருவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ரூ.44 லட்சம் சுருட்டல்
x
தினத்தந்தி 4 Oct 2021 11:43 PM GMT (Updated: 4 Oct 2021 11:43 PM GMT)

அரசு வேலைவாங்கித் தருவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ரூ.44 லட்சம் சுருட்டல் மோசடி ஆசாமி கைது.

சென்னை,

சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் மதனகோபால் (வயது 37). இவர் தன்னை முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும், பன்னீர்செல்வத்துக்கு அரசு வேலைக்கான தனி ஒதுக்கீடு அதிகாரம் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அரசு வேலை வாங்கித்தர முடியும் என்றும் கதை விட்டுள்ளார். அதை உண்மை என்று நம்பி, வங்கி அதிகாரி கமலக்கண்ணன் என்பவர் தனது மகள்கள் இருவருக்கு அரசு வேலை கேட்டு, மதனகோபாலை அணுகி ஏமாந்துள்ளார். ரூ.44 லட்சம் பணத்தை வாங்கி மதனகோபால் ஏமாற்றிவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கமலக்கண்ணன் புகார் கொடுத்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் கலாராணி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மதனகோபால், முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. அதன்பேரில் மதனகோபால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கார், 2 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story