தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே போலீசார் முக்கிய ரெயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

காட்பாடி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரெயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.

இதை மீறுபவர்களை ரெயில்வே சட்டப்பிரிவு 164-ன்கீழ் கைது செய்து, ரூ.1,000 அபராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய ரெயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

காட்பாடி ரெயில் நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பயணிகளின் உடமைகளை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சோதனை செய்தனர்.


Next Story