பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2023 5:47 AM GMT (Updated: 17 Oct 2023 6:28 AM GMT)

பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

அரசுப்பள்ளிகளில் 12 ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, 2023 ஆகஸ்ட் முதல் இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 2023 அக்டோபர் மாதத்தில், பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT- Common Law Admission Test) மற்றும் அனைத்திந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET - All India Law Entrance Test), தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறன் தேர்வு (NID - National Institute of Design - Design Aptitude Test ) மற்றும் வடிவமைப்பிற்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (UCEED- Undergraduate Common Entrance Examination for Design) ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின் விவரங்கள், வகுப்பு வாரியான கட்டண விவரங்கள் (Communal wise fee details), தகுதி வரம்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள நுழைவுத் தேர்வுகளுக்கான தகவல்களை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறியச் செய்து விருப்பமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்க செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story