தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை


தமிழக மீனவர்கள் 18  பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 16 Jan 2024 3:43 PM GMT (Updated: 17 Jan 2024 6:03 AM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது .

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13 -ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது .இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது .

இலங்கை மன்னார் தாள்வுபாடு கடற்பரப்பில் மீன்பிடித்தபோது ராமநாதபுரம் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.



Next Story