வாழைத்தோட்டத்தில் ஊடுபயிராக வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் - போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை


வாழைத்தோட்டத்தில்  ஊடுபயிராக வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் - போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
x

குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 40 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பெயரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதிரடி படையினருடன் கொட்டும் மழையில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது கஞ்சன் என்கிற முனியப்பன் என்பவருடைய வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டு அதிர்ச்சடைந்தார். ஆய்வில் சுமார் ஒன்றரை அடி உயரம் முதல் 4 அடி உயரம் வரை வளர்ந்துள்ள 40 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,

கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் வாட்ஸ் அப் எண் 9092700100 என்ற எண்ணை அறிமுகம் செய்தோம். அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்து ஏராளமான ரகசிய தகவல்கள் வரப்பட்டன.

அந்த தகவல்களின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக சோதனை செய்து கஞ்சா விற்பவர்கள், கடத்திச் செல்பவர்கள் மற்றும் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை கடத்திச் செல்பவர்கள் விற்ப்பவர்கள் என தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றன.

போலீசார் தெரிவித்த வாட்ஸ் அப் எண்ணின் பலனாக குடியாத்தம் அருகே கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 40 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிலத்தின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போல் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Related Tags :
Next Story