இந்தியாவுக்கான விமான போக்குவரத்து: ஜூலை 11ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு - பெரு நாடு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jun 2021 9:57 PM GMT (Updated: 20 Jun 2021 9:57 PM GMT)

இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, பெரு நாடு அறிவித்துள்ளது.

லிமா, 

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இதுவரை உலக அளவில் 17.91 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 38.80 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 19-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்த மாதம் 11-ந் தேதி வரை நீடித்துள்ளது.

Next Story