மைதானத்தில் நெஞ்சு வலியால் துடித்த கிரிக்கெட் வீரர்.. மருத்துவமனையில் அனுமதி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அபித் அலி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அபித் அலி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன் ஆன அபித் அலி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உள்பட 1180 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், 34 வயதான அபித் அலி குயாய்ட்-இ-ஆசாம் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானின் மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்துள்ளார் .இன்று நடைபெற்ற போட்டியின் போது அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறினார்.
பின் அவர் மருத்துவமனைக்கு சென்று முறையான பரிசோதனைகள் மேற்கொண்டார். பரிசோதனை முடிந்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் முதல் தர கிரிக்கெட் தொடர்களில் 9000 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story