இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட்; இந்திய அணி அறிவிப்பு - விராட் கோலி விலகல்


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட்; இந்திய அணி அறிவிப்பு - விராட் கோலி விலகல்
x

image courtesy; BCCI

தினத்தந்தி 10 Feb 2024 5:38 AM GMT (Updated: 10 Feb 2024 6:12 AM GMT)

தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் பங்கேற்காத விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடத விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். அதேபோல் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல். ராகுல், ரஜத் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜுரேல், கே.எஸ். பாரத், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

இதில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்தால் மட்டுமே பிளேயிங் 11-ல் இடம்பெறுவார்கள் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.



Next Story