கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல் போலீசில் புகார் கொடுத்துவிட்டு உடனே திரும்ப பெற்றார்

சினிமா உலகை விட்டு விலகி சென்னை தியாகராயநகர் ராமாராவ் தெருவில் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

Update: 2017-09-23 21:30 GMT
சென்னை,

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஜோதி மீனா(வயது 41). தற்போது சினிமா உலகை விட்டு விலகி சென்னை தியாகராயநகர் ராமாராவ் தெருவில் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஜோதிமீனா பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில், என்னுடைய வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில் ராகுல், நவீன், பிரவீன் ஆகிய 3 பேர் புகுந்தனர். அவர்கள் என்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

நான் பணம் தர மறுத்துவிட்டேன். இதனால் அவர்கள் என்னை தாக்கினர். மேலும் என்னையும், எனது மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்று விட்டனர்.’ என்று கூறியிருந்தார்.

ஜோதிமீனாவுக்கு 3 பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் அளித்த புகார் மனுவை ஜோதிமீனா உடனடியாக திரும்ப பெற்று விட்டார்.

மேலும் செய்திகள்