மக்களை மத ரீதியாக பிரித்தாள்வதில் பா.ஜ.க கைதேர்ந்தவர்கள்- நடிகர் பிரகாஷ்ராஜ்

மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட் செய்து உள்ளார். #Prakashraaj #JustAsking

Update: 2018-03-26 07:58 GMT
பெங்களூர்

கர்நாடகாவில் முதல்வர்  சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில்  கர்நாடகாவில் லிங்காயத்துக்களை தனி மதமாக அறிவித்தது. இதனையடுத்து மக்களை காங்கிரஸ் அரசு மதத்தால் பிரிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருந்தனர். 

பாஜக வினரின் குற்றச்சாட்டை விமர்சிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு டுவீட் செய்துள்ளார். மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத, இன ரீதியாக  பிரித்தாள்வது உங்களுக்கே கசந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த டுவீட் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்